மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு
கேகாலை மாவட்டம் மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது.
Published November 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கேகாலை மாவட்டம் மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 04 பேர் காணாமல் போயுள்ளதாக மாவனெல்ல மேலதிக மாவட்ட செயலாளர் திலீப் நிஷாந்த தெரிவித்தார்.
மேலும் 2 பேரை உயிருடன் மீட்க இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும், நேற்று இரவு வீடு திரும்பிய 4 பேர் மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.