கொத்மலை அணைக்கு சேதமில்லை
கொத்மலை அணை உடைந்ததாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென
கொத்மலை அணை உடைந்ததாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பிலுள்ள பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மழையினால் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு 2 அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், அதனூடாக வினாடிக்கு 80 கனமீற்றர் நீர் வெளியேற்றப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுவதற்கு முன்னர் சைரன் ஒலி எழுப்பப்பட்டதாகவும், இது சாதாரண நிலைமை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொத்மலை அணை உடைந்ததாகவும், அதனால் அணைக்குக் கீழ்ப்பகுதியில் வாழும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வந்தது.
இதன் காரணமாக குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தற்போது மேடான பகுதிகளுக்குச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.