திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது!
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி மூதூர் பகுதியில் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
Published December 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி மூதூர் பகுதியில் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்தாமை காரணமாக இவ்வாறு அந்த வீதி வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.
அப்பகுதியில் தொடர்ந்து நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மீட்புப் பணிகள் அங்கே வான்வழி ஊடாகவே இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அதேநேரம் வெள்ளத்தால் கந்தளாய் வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.