இலங்கைக்கான நிதியுதவியை அதிகரித்த பிரித்தானியா
திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான அனர்த்த நிவாரண நிதியை ஓர
Published December 6, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான அனர்த்த நிவாரண நிதியை ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுணாக பிரித்தானியா அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னர் இலங்கைக்கு 675,000 ஸ்ரேலிங் பவுண் வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்படுமென இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்திருந்தது.
குறித்த நிதியை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பல பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.