மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!
பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published December 6, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று இரவு 11 மணி வரை குறித்த எச்சரிக்கை அமுலில் இருக்குமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழையின் போது பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும்.
இதனால் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்னல் தாக்கத்தின் போது வெளி இடங்களில் நிற்பதை தவிர்க்குமாறும், கட்டிடங்களுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.