இன்றைய வானிலை நிலவரம்
நாட்டின் மீது வடகிழக்கு பருவமழை நிலைமைகள் படிப்படியாக ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் மீது வடகிழக்கு பருவமழை நிலைமைகள் படிப்படியாக ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 அஅ-க்கு அதிகமான ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 அளவுக்கு அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காலை வேளையின் ஆரம்பப் பகுதியில் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் சேதங்களை குறைத்துக்கொள்வதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.