மழையுடன் கூடிய வானிலை!
மழையுடன் கூடிய வானிலை!
நாட்டில் வடகிழக்கு பருவமழை நிலை கொண்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக் கூடும்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மி.மீற்றருக்கு மேல் மழை பெய்யக்கூடும்.
நாட்டில் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் சுமார் 75 மி.மீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மத்திய மலைகளின் கிழக்கு சரிவுகளிலும் அவ்வப்போது மணிக்கு (30-40) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.