வானிலை அறிவிப்பு
கிழக்கு அலை காற்றோட்டத்தின் செல்வாக்கு காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு
கிழக்கு அலை காற்றோட்டத்தின் செல்வாக்கு காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவும் தற்போதைய மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
100 மில்லி மீற்றரிலும் அதிகமான பலத்த மழை: கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது.
தீவின் ஏனைய பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
இந்த இடங்களில் சில பகுதிகளில் 75 மி.மீற்றரிலும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைகளின் கிழக்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.