வவுனியாவில் கூரிய ஆயுதத் தாக்குதலில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு

வவுனியா மாவட்டம், செட்டிகுளம் – வீரபுரம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவரை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Published December 22, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

வவுனியா மாவட்டம், செட்டிகுளம் – வீரபுரம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவரை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர், வவுனியா தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொலைபேசி வழி ஏற்பட்ட உரையாடலின் காரணமாக உருவான வாக்குவாதம் தீவிரமடைந்ததையடுத்து, குழுவொன்றினால் குறித்த இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, 19 மற்றும் 22 வயதுடைய மூன்று சந்தேகநபர்களை செட்டிகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய இன்னொரு சந்தேகநபரை கைது செய்யும் நோக்கில் செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *