அர்ச்சுனாவுக்கும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம்
சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று இடம்பெற்றது.
சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று இடம்பெற்றது.
அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் அனுமதிக்காததால் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டதோடு, இதனால் குழப்ப நிலை ஏற்பட்டது.
சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ச.சிறீபவானந்தராஜா தலைமையில் ஆரம்பமானது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெசீதனுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.
ஆசனம் ஒதுக்கப்பட்டதில் ஆரம்பித்த பிரச்சினை, கூட்டத்தில் தொடர்ந்தும் எதிரொலித்தது.
சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் முடிவடைந்த பின்னர் வெளியே வந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.