புனரமைப்பிற்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் டொலர்
திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் பணிகளுக்கென
Published December 23, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் பணிகளுக்கென 450 மில்லியன் அமெரிக்க டொலரை நிவாரணமாக வழங்க இந்திய அரசு தீர்மானித்துள்ளது.
இதில் 350 மில்லியன் டொலர் கடனுதவியாக வழங்கப்படுவதுடன், 100 மில்லியன் டொலர் நன்கொடையாக வழங்கப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் இன்று இடம்பெற்ற ஒன்றிணைந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.