நுகேகொடையில் துப்பாக்கிச்சூடு
நுகேகொடை சந்தியில் இருந்து கொஹ_வல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில்
Published December 23, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நுகேகொடை சந்தியில் இருந்து கொஹ_வல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து நேற்றிரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.