மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
நேற்று செவ்வாய்க்கிழமை (23) பலாங்கொடை - கல்தோட்ட பொலிஸ் பிரிவின் பின்னகெட்டிய பகுதியில் உள்ள வளவை ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் மீது கும்புக் மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Published December 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நேற்று செவ்வாய்க்கிழமை (23) பலாங்கொடை – கல்தோட்ட பொலிஸ் பிரிவின் பின்னகெட்டிய பகுதியில் உள்ள வளவை ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் மீது கும்புக் மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
47 வயதுடைய பலாங்கொடை – கல்தோட்ட பகுதியைச் சேர்ந்தவறே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.