பங்களாதேஷ் பிரீமியர் லீக் நாளை ஆரம்பம்.
பீ.பி.எல். என அழைக்கப்படும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை (26) ஆரம்பமாக உள்ளது.
Published December 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பீ.பி.எல். என அழைக்கப்படும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை (26) ஆரம்பமாக உள்ளது.
ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடர், தற்போது பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி சூழ்நிலையில் நடத்தப்படுவது சவாலானதாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை வீரர்கள் அஞ்சலோ மேத்யூஸ், குசல் மெண்டிஸ் உள்ளிட்ட பலரும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.
எனினும், நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சில வெளிநாட்டு வீரர்கள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்காமல் இருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.