அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு : 6 பேர் கைது!
கடந்த டிசம்பர் 22ஆம் திகதி அம்பலாங்கொடை பிரதேசத்தில் காட்சியறை முகாமையாளர்
Published December 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கடந்த டிசம்பர் 22ஆம் திகதி அம்பலாங்கொடை பிரதேசத்தில் காட்சியறை முகாமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, இவர்களில் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினராலும், ஏனைய நால்வர் காலி குற்றத்தடுப்புப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரிவோல்வர் ஆகிய துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.