நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதக் குழு மீது அமெரிக்கா தாக்குதல்- டிரம்ப் அறிவிப்பு
கிறிஸ்துமஸ் அன்று நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதக் குழு மீது
Published December 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
கிறிஸ்துமஸ் அன்று நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதக் குழு மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாக அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த நூறு ஆண்டுகளாக நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை பலமுறை கண்டித்தும் அவர்கள் திருந்தாததால் அமெரிக்கா தற்போது தாக்குதல் தொடுத்துள்ளது.
கிறிஸ்துவர்களை குறித்து தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. கிறிஸ்துவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்தால் மேலும் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.