ஒரே நாளில் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் ரூ. 61 மில்லியனைத் தாண்டியது.
ஒரே நாளில் அதிவேக நெடுஞ்சாலைகள் வழியாக இடம்பெற்ற வாகன போக்குவரத்தினால் ரூ. 61 மில்லியன் வருமானம் பெறப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
Published December 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஒரே நாளில் அதிவேக நெடுஞ்சாலைகள் வழியாக இடம்பெற்ற வாகன போக்குவரத்தினால் ரூ. 61 மில்லியன் வருமானம் பெறப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில், 1 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதற்கு முந்தைய நாளிலும் அதிவேக நெடுஞ்சாலைகளில் 170,069 வாகனங்கள் இயக்கப்பட்டதுடன், அதன் மூலம் ரூ. 61.7 மில்லியன் வருமானம் ஈட்டப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.