ஹிக்கடுவை கடலில் உயிருடன் மீட்கப்பட்ட உக்ரைன் தாய் மற்றும் மகன்

ஹிக்கடுவை பன்னம்கொட கடலில் சிக்கிய வெளிநாட்டு தாய்–மகன் மீட்பு

Published December 28, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

ஹிக்கடுவை, பன்னம்கொட கடற்கரையில் நேற்று முன்தினம் நீராடிக் கொண்டிருந்த ஒரு வெளிநாட்டு பெண் மற்றும் அவரது மகன், கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஹிக்கடுவை பொலிஸின் உயிர்காப்புப் பிரிவினர் அவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மதிய நேரத்தில் கடற்கரையில் கடமையில் ஈடுபட்டிருந்த உயிர்காப்பு அதிகாரிகள்,
சப் இன்ஸ்பெக்டர் சிறிமல், பொலிஸ் கான்ஸ்டபிள் (87162) திஸாநாயக்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் (96221) துமிந்த ஆகியோரே இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில், 42 வயதுடைய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும், அவருடைய 14 வயதுடைய மகனும் கடல் அனர்த்தத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *