காதலன் கண்முன்னே ஆற்றில் குதித்த யுவதி மாயம்!
வென்னப்புவ, நைனாமடை பாலத்திலிருந்து யுவதியொருவர் நேற்று கிங் ஓயாவுக்குள் குதித்து
Published December 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
வென்னப்புவ, நைனாமடை பாலத்திலிருந்து யுவதியொருவர் நேற்று கிங் ஓயாவுக்குள் குதித்து நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
குறித்த யுவதி தான் காதலித்த இளைஞனுக்கு தொலைபேசியெடுத்து சம்பவ இடத்துக்கு வருமாறு அழைத்ததையடுத்து, அந்த இளைஞனும் நண்பர் ஒருவருடன் பாலத்துக்கருகில் வந்தபோது யுவதி ஆற்றில் குதித்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
யுவதியைக் காப்பாற்ற அவரது காதலனும் ஆற்றில் குதித்துள்ளார்.
சுற்றியிருந்தவர்கள் அந்த இளைஞனை பத்திரமாக மீட்ட போதிலும் யுவதி நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
யுவதியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.