யாழ்ப்பாணத்தில் காணமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!
யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராடிய இளைஞன் ஒருவர் கடலோடு அடித்துச்
Published December 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராடிய இளைஞன் ஒருவர் கடலோடு அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இன்றைய தினம் அதிகாலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் தனது நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக தாளையடி கடற்கரைக்கு நேற்று முன்தினம் பிற்பகல் நீராட சென்றுள்ளார்.
கடற்பகுதியில் நிலவும் சீரற்ற காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் குறித்த இளைஞன் கடலோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு அடித்துச் செல்லப்பட்ட நபர் உடுத்துறையைச் சேர்ந்த உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞனை நேற்று மற்றும் நேற்று முன்தினம் முழுவதும் இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
