ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அவருக்கு
Published January 5, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய இன்று (05) முற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், விவசாய அமைச்சின் செயற்பாடுகளுக்காக இராஜகிரிய பகுதியில் வாடகை அடிப்படையில் கட்டிடம் ஒன்றைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் அமைச்சரவை அமைச்சராகப் பதவி வகித்தவர் என்ற அடிப்படையில், அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமையவே அவர் இன்று காலை விசாரணை அதிகாரிகளுக்கு முன்னால் முன்னிலையாகியுள்ளார்.