பல பகுதிகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சிவப்பு எச்சரிக்கை நாளை நண்பகல் 12 மணி வரை நீ டிக்கப்பட்டுள்ளது.
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சிவப்பு எச்சரிக்கை நாளை நண்பகல் 12 மணி வரை நீ டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரிவு மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை பிரதேச செயலக பிரிவுகளுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதே நேரத்தில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.