அமரகீர்த்தியின் கொலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கின் தீர்ப்பை
Published January 14, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்க கம்பஹா நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
2022 மே 9ஆம் திகதி நிட்டம்புவ நகரில் இலங்கை பொதுஜன பெரமுன பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்புக் காவலர் ஜெயந்த குணவர்தன ஆகியோரைத் தாக்கி கொலை செய்ததற்காக 41 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் கம்பஹா உயர் நீதிமன்றத்தில் 2023ஆம் ஆண்டு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.