சுற்றுலாப் பயணிகள் சென்ற வேன் விபத்து

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்த வேன் ஒன்று, வெலிமடை பிரதான வீதியில் நுவரெலியா கிரகரி வாவி அருகே நேற்று (15) பிற்பகல் சுமார் 3 மணியளவில் விபத்துக்குள்ளானது.

Published January 16, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்த வேன் ஒன்று, வெலிமடை பிரதான வீதியில் நுவரெலியா கிரகரி வாவி அருகே நேற்று (15) பிற்பகல் சுமார் 3 மணியளவில் விபத்துக்குள்ளானது.

வெலிமடையிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, எதிர்திசையில் வந்த மற்றொரு வேனுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், விபத்தில் தொடர்புபட்ட இரு வேன்களும் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *