தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Published January 16, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியமை மற்றும் கிளர்ச்சி தொடர்பான குற்றச்சாட்டுகளில், அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்கான தீர்ப்பை சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று (16) அறிவித்தது.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி நள்ளிரவில், யூன் சுக் இயோல் திடீரென இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தி பாராளுமன்ற செயல்பாடுகளை முடக்க முயற்சி மேற்கொண்டிருந்தார்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கொண்ட துணிச்சலான எதிர்ப்பினால், அந்த முயற்சி சில மணி நேரங்களிலேயே தோல்வியடைந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட வழக்குகளும் தொடரப்பட்டன.

வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், இன்றைய தினம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *