7 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 35 வயது நபர் கைது

தைப் பொங்கல் தினத்தன்று 7 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாக 35 வயது

Published January 17, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

தைப் பொங்கல் தினத்தன்று 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் 35 வயது இளைஞர் ஒருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியும் சந்தேகநபரும் நாவலப்பிட்டியில் உள்ள வெஸ்ட்வேர்ல்ட் தோட்டத்தின் ரிலாகல பகுதியைச் சேர்ந்தவர்கள், மேலும் (15) மதியம் குடிபோதையில் இருந்த சந்தேகநபர் சிறுமியை அவரது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார்.

நீண்ட நேரம் வீட்டில் இல்லாத சிறுமியை பெற்றோர் தோட்டத்தில் வசிக்கும் உறவினர்களிடமும் மற்றும் தோட்டத் தொழிலாளர்களிடம் தேடியுள்ளனர்.

இறுதியில் தோட்ட வீட்டின் மேலிருந்து சிறுமி அழும் சத்தம் கேட்டதும், உறவினர்கள் சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு காணாமல் போயிருந்த சிறுமியை கண்டுபிடித்துள்ளனர்.

வீட்டில் உள்ளவர்கள் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுமி சந்தேகநபரின் பெயரை வெளிப்படுத்தி நடந்த விபரங்கள் கூறியுள்ளார். இதன் பின்னர் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில்,சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

தொடர்ந்து சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *