பெருந்தொகை கைப்பேசிகளை சட்டவிரோதமாக கடத்திய நபர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்

Published January 19, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 3 கோடி 40 இலட்சம் ரூபாய் (ரூ. 34,000,000) பெறுமதியான மிக நவீனரகமான கையடக்கத் தொலைபேசிகள் 397 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அவர் நேற்று காலை 07.00 மணிக்கு டுபாயில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-226 எனும் விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஒருவர் என தெரியவந்துள்ளது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) அனுமதியின்றியும், சுங்க அதிகாரிகளுக்கு அறிவிக்காமலும், 3 பொதிகளில் மறைத்து “பச்சை வழி” (Green Channel) ஊடாக இந்தத் தொலைபேசிக் கையிருப்பைக் கொண்டு வந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *