ஆரோக்கியமற்ற நிலையில் பல பகுதிகளில் காற்றின் தரம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் (Slightly Unhealthy)

Published January 20, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் (Slightly Unhealthy) காணப்பட்டது.

கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, குருணாகல் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இலங்கை வளிமண்டலத் தரச் சுட்டெண் (SL AQI) 104 முதல் 144 வரை பதிவாகியுள்ளது. வளிமண்டலத்தில் PM2.5 நுண்துகள்களின் அளவு அதிகரித்தமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில நகரங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் (Moderate) காணப்பட்டது.

அடுத்த 24 மணிநேரத்திலும் பெரும்பாலான நகரங்களில் இந்த நிலை தொடரக்கூடும் என Nடீசுழு எதிர்வு கூறியுள்ளது. இதன்போது வளிமண்டலத் தரச் சுட்டெண் 48 முதல் 140 வரையான வரம்பிற்குள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *