பாராளுமன்றத்தில் இன்று அஸ்வெசும விவாதம்
பாராளுமன்றத்தில் இன்று (20) நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி
பாராளுமன்றத்தில் இன்று (20) நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டம் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.
இவ்விவாதம் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை நடைபெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வார நடவடிக்கைகளுக்காக இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
‘திட்வா’ புயலை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தம் இன்மை தொடர்பில் முழுமையான ஆய்வை மேற்கொண்டு அறிக்கையிடவும், அது தொடர்பான தமது முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நாளை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வியாழக்கிழமை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதோடு, வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
பாராளுமன்றம் இன்று (20) முதல் 23 ஆம் திகதி வரை கூடவுள்ளது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை (20) காலை 9.30 மணி முதல் காலை 10.00 மணி வரை, நிலையியற் கட்டளைகள் 22 (1) முதல் (6) வரை குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு காலை 10.00 மணி முதல் காலை 11.00 மணி வரையிலான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் கேள்விகளுக்கு காலை 11.00 மணி முதல் காலை 11.30 மணி வரையிலான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.