சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம்
கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம்..
Published January 21, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை, சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரம் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் தெளிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், தற்போதைய சட்டமா அதிபர் மீது ஊழல் மற்றும் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.