கிழக்கு மாகாண மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு
கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் மருத்துவர்களினால் முன்னெடுக்கப்பட்ட
கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் மருத்துவர்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிமுதல் கைவிடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை அடுத்து, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நோயாளர் பராமரிப்பு சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு (Medical Superintendent) எதிராக முன்வைக்கப்பட்டிருந்த புகார்களை அடுத்து, அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பணிப்புறக்கணிப்பு மீளப் பெறப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளரினால் இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் வழங்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.