கம்பொல உடபளாத பிரதேச சபைக் கூட்டத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழல்
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு, வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கிய மக்களுக்கு
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு, வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கிய மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய 25,000 ரூபாய் நிவாரணத் தொகை இதுவரை சரியாக வழங்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அகமது ஹாபிஸ் குற்றம் சுமத்தினார்.
இதற்குப் பதிலளித்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், இந்த நிவாரணத் தொகையை வழங்குவது பிரதேச செயலகமே தவிர, பிரதேச சபை அல்ல என்று கூறினர். எனவே இது குறித்து பிரதேச செயலாளரிடம் வினவுமாறு அவர்கள் தெரிவித்தனர்.
சபையில் ஏற்பட்ட தொடர்ச்சியான வாக்குவாதங்கள் காரணமாக, கூட்டத்திலிருந்த தேசிய மக்கள் சக்தியின் 17 உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறினர்.
வெளியேறிய உறுப்பினர்களை நோக்கி ஹாபிஸ் உறுப்பினர் அவதூறான வார்த்தைகளால் பேசியதால், அவர்கள் மீண்டும் சபைக்குள் வந்து தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கடும் பதற்றம் நிலவியது.
கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் அனர்த்த காலங்களில் சபை மூடப்பட்டிருந்தமை குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது.
பிரதேச சபைத் தலைவர் நவரத்ன பண்டார தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே கடும் மோதல் போக்கு காணப்பட்டது.