ஹொரணையில் கோர விபத்து: 18 வயது இளைஞன் உயிரிழப்பு
ஹொரண - புலத்சிங்கள வீதியின் தியபரல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்
Published January 30, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
ஹொரண – புலத்சிங்கள வீதியின் தியபரல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து, எதிர்த்திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சௌம்யகம, மஹகம பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், புலத்சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.