தலாய்லாமாவுக்கு கிராமி விருது – சீனா கண்டனம்

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டதற்கு சீனா

Published February 3, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டதற்கு சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 68ஆவது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழாவில், தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை வென்றார். அவரது “Meditations: The Reflections of His Holiness the Dalai Lama” என்ற ஆல்பத்திற்காக, “சிறந்த ஆடியோ புத்தகம், விவரிப்பு மற்றும் கதைசொல்லல் பதிவு” பிரிவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை சீனாவுக்கு எதிரான அரசியல் சூழ்ச்சிக்கான கருவியாக சில தரப்பினர் பயன்படுத்துவதாகச் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் குற்றம் சாட்டியுள்ளார்.

தலாய் லாமா ஒரு மதத் தலைவர் மட்டுமல்ல, அவர் மதத்தின் போர்வையில் சீனாவுக்கு எதிராகப் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு அரசியல் அகதி என்று பெய்ஜிங் தெரிவித்துள்ளது. மேலும் கலைத்துறை சார்ந்த விருதுகளை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதை சீனா வன்மையாக எதிர்ப்பதாகவும் கூறியுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *