புதிய கணக்காய்வாளர் நாயகமாக எல். எஸ். பி. ஜயரத்ன நியமனம்
சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாக கடமையாற்றும் திருமதி. எல். எஸ். பி. ஜயரத்னவை
Published February 3, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாக கடமையாற்றும் திருமதி. எல். எஸ். பி. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு இன்று (03) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சபை இன்று (3) நண்பகல் 12.00 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் கூடிய போதே இந்த அனுமதி கிடைத்துள்ளது.
இதற்கமைய, எல். எஸ். பி. ஜயரத்னவின் பெயரை அரசியலமைப்பு சபை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.