சுதந்திர தின நிகழ்வில் இணைந்தார் ஜனாதிபதி
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கொழும்பு சுதந்திர
Published February 4, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்துள்ளார்.
இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியுள்ளன.
78-வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறுகின்றன.
1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியிடமிருந்து சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காகத் தியாகங்களைச் செய்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட சுமார் 400 விருந்தினர்களுடன்இ முப்படை மற்றும் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 4இ500-க்கும் மேற்பட்ட படையினர் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.