சில பகுதிகளில் 50 மி.மீ மழைவீழ்ச்சி
நாட்டின் ஒரு சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யுமென வளிமண்டலவியல்
நாட்டின் ஒரு சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு. வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் , மட்டக்களப்பு அம்பாறை மற்றும் ஹம்பாந்தேர்டடை மாவட்டத்தின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். இதன்போது குறித்த பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேல் , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.