குளவித் தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள்
கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் சிலர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
Published February 5, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் சிலர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
39 பாடசாலை மாணவர்கள் இவ்வாறு குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.