வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் சுமார் ஒரு
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் சுமார் ஒரு கோடியே 28 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியுள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த மூன்று இலங்கை பயணிகள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18, 42 மற்றும் 61 வயதுடைய மூன்று வர்த்தகர்கள் ஆவர். இவர்கள் நீர்கொழும்பு மற்றும் கொட்டாரமுல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் இன்று அதிகாலை 3:30 மணியளவில் ஷார்ஜாவிலிருந்து (Sharjah) ஏர் அரேபியா (Air Arabia) G9-587 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்களது 6 பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 429 சிகரெட்டுகள் மீட்கப்பட்டன. இதில் மொத்தம் 85,800 சிகரெட்டுகள் இருந்தன.
சந்தேகநபர்கள் மூவரும் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைக்காக அவர்கள் எதிர்வரும் 11ஆம் திகதி அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.