பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியும் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது

சூரியகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியும் ......

Published February 6, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

சூரியகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியும் கான்ஸ்டபிள் ஒருவரும் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மான் ஒன்றைக் கொன்றமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். 

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை மீறியமைக்காக இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சந்தேகநபர்கள் நாளை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *