7.4 இலட்சம் போதைப்பொருள் காப்சூல்கள் கைப்பற்றப்பட்டன.
பிப்ரவரி 2ஆம் திகதி வத்தளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 7,44,500 மருந்து காப்ஸ்யூல்கள் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு சந்தேகநபர்கள்
பிப்ரவரி 2ஆம் திகதி வத்தளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 7,44,500 மருந்து காப்ஸ்யூல்கள் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் உளவுத் தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தன.
மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் SLNS ரங்கால மற்றும் ஜெமுனு கடற்படை முகாம்களைச் சேர்ந்த கடற்படை வீரர்கள், வத்தளை காவல்துறையுடன் இணைந்து சந்தேகநபர்களை கைது செய்ததுடன், போதை மருந்து காப்ஸ்யூல்கள் மற்றும் அவற்றை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு லொறியையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கல்பிட்டி மற்றும் கொபேகனே பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதை மருந்துகள் மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.