கலகாவில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு
கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் .......
Published February 7, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருவேப்பிலை மரத்தில் கருவேப்பிலை பறித்துக்கொண்டிருந்த போது, தரையில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி இந்த மரணங்கள் சம்பவித்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கலகா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.