குறிப்பிட்ட 5 இடங்களில் புதிய ஓட்டுநர் உரிம சேவை ஆரம்பம்
வெளிநாடுகளில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமங்களின்.........
Published February 9, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வெளிநாடுகளில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமங்களின் அடிப்படையில், தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் சேவையானது கடந்த 2ஆம் திகதி முதல் விரிவாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இதுவரை வேரஹெர மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அலுவலகங்களில் மாத்திரம் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவையை, இனிவரும் காலங்களில் குருணாகல், ஹம்பாந்தோட்டை, கம்பஹா, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலக அலுவலகங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.