பயணிகளின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் பெண் நடத்துனர்கள் கடமையில்
இலங்கை போக்குவரத்து சபையின் (ளுடுவுடீ) வரலாற்றில் முதன்முறையாக சேவையில்
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) வரலாற்றில் முதன்முறையாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண் நடத்துனர்கள் (Conductors), பயணிகளின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் தமது பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) வரலாற்றில் முதன்முறையாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண் நடத்துனர்கள் (Conductors), பயணிகளின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் தமது பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் வழிகாட்டலின் கீழ் இந்த புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பெண் அதிகாரிகள் தற்போது அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள போக்குவரத்து வழித்தடங்களில் தமது சேவைகளை வழங்கி வருகின்றனர். இவர்களது சேவைக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.