மேற்கிந்திய தீவுகள் அணி இலகு வெற்றி

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (15) இடம்பெற்ற நேபாளம் அணிக்கு

Published February 15, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (15) இடம்பெற்ற நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இன்று முற்பகல் 11 மணிக்கு மும்பையில் ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய நேபாளம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

நேபாளம் அணி சார்பில் திபெந்திர சிங் ஐரி அதிகபட்சமாக 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் 134 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 15.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *