இஸ்ரேலின் தாக்குதலில் பலஸ்தினர்கள் 11 பேர் பலி
காஷா எல்லையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பலஸ்தினர்கள் உயிரிழந்துள்ளனர்.
காஷா எல்லையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பலஸ்தினர்கள் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
வடக்கு காஷாவிலுள்ள முகாம்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ஆறு பலஸ்தினர்கள் உயிரிழந்துள்ளதாக பலஸ்தினிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.
தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட மற்றுமொரு தாக்குலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து பதில் வழங்கியுள்ள இஸ்ரேல், சமாதான ஒப்பந்தத்தை மீறும் வகையில் ஹமாஸ் மற்றும் கிளர்ச்சியாளர்களின் பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் வகையில் இரு தரப்பும் செயற்பட்டு வரும் நிலையில் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.