இலங்கை மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்து

40 வருடங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய

Published February 16, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

40 வருடங்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடியுரிமை மற்றும் நீண்டகால விசா வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 1983 முதல் இலங்கையில் ஏற்ப்பட்ட இன மோதல்களால் தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேறிய இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான வசதிகளை வழங்கியது.

இவ்வாறு 89000 இலங்கையர்கள் தமிழ்நாட்டில் வசிக்கின்றனர். இவர்களில் பலர் 30 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் உள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இலங்கை தமிழர்களின் குறித்தான முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கியதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *