முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை
முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட முறையற்ற வகையில் ........
Published February 20, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டிய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.