Super 8 சுற்று இன்று ஆரம்பம்!
20 க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 8 சுற்று இன்று ஆரம்பமாகிறது. இன்று முதல்
20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 8 சுற்று இன்று ஆரம்பமாகிறது. இன்று முதல் மார்ச் மாதம் 01ம் திகதி வரை சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இந்த சுற்றில் அனைத்து அணிகளும் இரு குழுக்களின் கீழ் போட்டியிடவுள்ளதுடன் முதல் குழுவில் இந்தியா, சிம்பாம்பே, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இடம்பிடித்துள்ளன.
இரண்டாவது குழுவில் இங்கிலாந்து, நியுசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் உள்ளன.
இந்நிலையில் சுப்பர் 8 சுற்றில் இலங்கை பங்கேற்றும் முதல் போட்டி நாளை (22) இங்கிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ளது. 2வது போட்டி 25ம் திகதி நியுசிலாந்து அணிக்கு எதிராகவும், 3வது போட்டி 28ம் திகதி பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடரின் அரையிறுதிப் போட்டிகள் மார்ச் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் இடம்பெறும். தொடரின் இறுதிப் போட்டி மார்ச் மாதம் 8ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.