ரயிலுடன் கார் மோதியதில் மூவருக்கு காயம்
இன்று (22) முற்பகல் பயாகலையில் உள்ள ரயில்வே கடவையில் பயணித்த ரயிலுடன் காரொன்று
Published February 22, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இன்று (22) முற்பகல் பயாகலையில் உள்ள ரயில்வே கடவையில் பயணித்த ரயிலுடன் காரொன்று மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தினால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடவை சீர்செய்யப்படும் வரை காலதாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
விபத்தில் வாகனத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் கடவைகளைக் கடக்கும்போது சாரதிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடனும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றியும் செயற்படுமாறு ரயில்வே திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.